Tamilnadu
கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் தீ விபத்து : 3 பேருந்துகள் நாசம் - போராடி அணைத்த தீயணைப்புத்துறை!
கொரோனா ஊரடங்கில் பொதுப் போக்குவரத்து தடை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆம்னி பேருந்தில் திடீரென தீப்பற்றியது. சிறிது நேரத்தில், அருகிலிருந்து ஆம்னி பேருந்துகளுக்கும் தீ பரவியது.
தீ பிடிப்பதை கண்ட பாதுகாப்பு ஊழியர் தீயணைப்பான் மூலம் அணைக்க முயற்சித்தும், தீ வேகமாகப் பரவியதால் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே 3 ஆம்னி பேருந்துகள் முழுவதும் எரிந்து நாசமாகின. மேலும், 2 பேருந்துகள் லேசான சேதமடைந்துள்ளன. துரித நடவடிக்கைகளால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தீவிபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த வீடியோ பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!