Tamilnadu
கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் தீ விபத்து : 3 பேருந்துகள் நாசம் - போராடி அணைத்த தீயணைப்புத்துறை!
கொரோனா ஊரடங்கில் பொதுப் போக்குவரத்து தடை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆம்னி பேருந்தில் திடீரென தீப்பற்றியது. சிறிது நேரத்தில், அருகிலிருந்து ஆம்னி பேருந்துகளுக்கும் தீ பரவியது.
தீ பிடிப்பதை கண்ட பாதுகாப்பு ஊழியர் தீயணைப்பான் மூலம் அணைக்க முயற்சித்தும், தீ வேகமாகப் பரவியதால் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே 3 ஆம்னி பேருந்துகள் முழுவதும் எரிந்து நாசமாகின. மேலும், 2 பேருந்துகள் லேசான சேதமடைந்துள்ளன. துரித நடவடிக்கைகளால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தீவிபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த வீடியோ பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”
-
இட்டுன்னு போயி இட்டுன்னு வருவதுதான் அமைச்சரின் வேலை என நினைக்கிறாரா? : தி.மு.க ஐடி விங் கேள்வி!
-
“அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மேகதாது அணை முயற்சியைத் தடுப்போம்!” : உதயநிதி!