Tamilnadu
கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் தீ விபத்து : 3 பேருந்துகள் நாசம் - போராடி அணைத்த தீயணைப்புத்துறை!
கொரோனா ஊரடங்கில் பொதுப் போக்குவரத்து தடை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆம்னி பேருந்தில் திடீரென தீப்பற்றியது. சிறிது நேரத்தில், அருகிலிருந்து ஆம்னி பேருந்துகளுக்கும் தீ பரவியது.
தீ பிடிப்பதை கண்ட பாதுகாப்பு ஊழியர் தீயணைப்பான் மூலம் அணைக்க முயற்சித்தும், தீ வேகமாகப் பரவியதால் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே 3 ஆம்னி பேருந்துகள் முழுவதும் எரிந்து நாசமாகின. மேலும், 2 பேருந்துகள் லேசான சேதமடைந்துள்ளன. துரித நடவடிக்கைகளால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தீவிபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த வீடியோ பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!