Tamilnadu
ஊரடங்கில் தலைத்தூக்கும் சூதாட்டம்.. சென்னையில் அ.தி.மு.க நிர்வாகிகள் உட்பட 28 பேர் கைது!
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள கற்பகம் அவென்யூவில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக பட்டினப்பாக்கம் போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலிஸார் இரு தினங்களுக்கு முன்பு இரவு அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது 28 நபர்கள் சேர்ந்து சுமார் 9.55 லட்ச ரூபாய் பணம் வைத்து சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 28 நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்த பணத்தையும் பறிமுதல் செய்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டர்.
விசாரணையில் 26 பேரில் செங்கல்பட்டு மாவட்டம் அ.தி.மு.க நிர்வாகி ஒருவரும் மாதவரத்தை சேர்ந்த அ.தி.மு.க அம்மா பேரவை நிர்வாகி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதில் மகேந்திரன் மற்றும் கோபி என்ற இரண்டு நபர்கள்தான் இந்த சூதாட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் என தெரியவந்ததால் இவர்கள் இருவரையும் போலிஸார் கைது செய்தனர்.
மீதம் உள்ள 26 நபர்கள் மீதும் சூதாட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்நிலைய ஜாமினில் விடுதலை செய்தனர். ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி அ.தி.மு.க நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுப்பட்டது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”