Tamilnadu
“மோடி இந்தியாவை அழிக்கிறார்; எடப்பாடி தமிழகத்தை அழிக்கிறார்” - தா.பாண்டியன் குற்றச்சாட்டு!
இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 74வது சுதந்திர தினத்தையொட்டி, திருச்சி மிளகுபாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வாயிலில் தேசியக்கொடியினை தா.பாண்டியன் ஏற்றிவைத்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், “போராடிப் பெற்ற நம் சுதந்திரத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாம் இப்போது இருக்கிறோம். வெளிநாட்டு துரோகிகளை விட உள்நாட்டு துரோகிகள் மோசமானவர்கள்.
டாலரிலிருந்து இந்தியா விடுபடவேண்டும். டாலர் கொடுத்து கச்சா எண்ணெய் வாங்கும் வரை நம் நாட்டிற்கு முன்னேற்றம் இல்லை. எனவே ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டும்.
உலகத்திலேயே பெட்ரோல் அதிக விலைக்கு விற்கப்படும் நாடு இந்தியா தான். ட்டிரம்ப் உலகத்தை அழிக்கிறார், மோடி இந்தியாவை அழிக்கிறார். எடப்பாடி தமிழகத்தை அழிக்கிறார். எனவே பா.ஜ.கவை எதிர்க்கும் கட்சிக்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும்” என்று அவர் கூறினார்.
Also Read
-
‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா? குவியும் கண்டனங்கள்’
-
‘மிரட்டும் வயநாடு மண்சரிவு.. உயரும் பலி எண்ணிக்கை.. அடுத்த 24 மணி நேரம்..’ - வானிலை மையம் எச்சரிக்கை!
-
20 ஆண்டுகால கனவு நொறுங்கியது... கண்ணீருடன் முடிந்த உலகக் கோப்பை; ரொனால்டோ என்ற உணர்வின் கதை!
-
“அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு அவமானம்” : கழக மகளிர் அணி கண்டனம்!
-
“வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!