Tamilnadu
“மோடி இந்தியாவை அழிக்கிறார்; எடப்பாடி தமிழகத்தை அழிக்கிறார்” - தா.பாண்டியன் குற்றச்சாட்டு!
இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 74வது சுதந்திர தினத்தையொட்டி, திருச்சி மிளகுபாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வாயிலில் தேசியக்கொடியினை தா.பாண்டியன் ஏற்றிவைத்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், “போராடிப் பெற்ற நம் சுதந்திரத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாம் இப்போது இருக்கிறோம். வெளிநாட்டு துரோகிகளை விட உள்நாட்டு துரோகிகள் மோசமானவர்கள்.
டாலரிலிருந்து இந்தியா விடுபடவேண்டும். டாலர் கொடுத்து கச்சா எண்ணெய் வாங்கும் வரை நம் நாட்டிற்கு முன்னேற்றம் இல்லை. எனவே ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டும்.
உலகத்திலேயே பெட்ரோல் அதிக விலைக்கு விற்கப்படும் நாடு இந்தியா தான். ட்டிரம்ப் உலகத்தை அழிக்கிறார், மோடி இந்தியாவை அழிக்கிறார். எடப்பாடி தமிழகத்தை அழிக்கிறார். எனவே பா.ஜ.கவை எதிர்க்கும் கட்சிக்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும்” என்று அவர் கூறினார்.
Also Read
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவரவோ மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
-
மணிப்பூர் வன்முறை - கைகட்டி வேடிக்கை பார்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசும் குற்றவாளி அல்லவா? : முரசொலி!
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !