Tamilnadu
திருமங்கலம் அருகே பட்டப்பகலில் பெண் எரித்துக் கொலை? - போலிஸார் விசாரணை!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பி.டி.ராஜன் தெரு அருகே உள்ள குண்டாறு ஆற்றுப்பகுதியில் மர்மமான முறையில் சடலம் எரிக்கப்பட்டுக் கிடப்பதாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
குண்டாறு காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத முக்கால்வாசி எரிந்த நிலையில் பெண் சடலம் கிடந்தது. எரிக்கப்பட்ட பெண் யார் எனவும், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உடலை ஆய்வு செய்ததில் இறந்த பெண் 60 வயது மதிக்கத்தக்கவர் எனத் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !