Tamilnadu
கொரோனா நோயுடனான போரில் அதிக மருத்துவர்களை இழந்த தமிழகம்: இன்னுயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செய்யுமா அரசு?
உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் தீவிரமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முன்னிலையில் இருந்து போராடும் மருத்துவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. குறிப்பாக, கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களே பலர் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதில், கொரோனா சிகிச்சை அளித்த மருத்துவர்களில் நாடுமுழுவதும் சுமார் 175 மருத்துவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதிலும் இந்தியாவிலேயே அதிக மருத்துவர் உயிரிழந்ததுள்ளது தமிழகத்தில் தான். தமிழகத்தில் மட்டும் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில் 23 மருத்துவர்களும் குஜராத்தில் 20 மருத்துவர்களும் டெல்லியில் 12 மருத்துவர்களும் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். இந்த மருத்துவர்கள் உயிரிழந்த பட்டியலை இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.
இன்னுயிர் நீந்தவர்களுக்கு மரியாதை செய்யுமா அரசு? என அரசு மருத்துவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிறப்பான மருத்துவ கட்டமைப்பை கொண்டுள்ள தமிழகத்தில் மருத்துவர்களுக்கு அதிகம் நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!