Tamilnadu
சாத்தான்குளம் தந்தை - மகன் இரட்டைக் கொலை வழக்கில் கைதான காவலர்கள் இருவருக்கு கொரோனா தொற்று!
சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக் கொலை வழக்கு விசாரணை சி.பி.ஐ-க்கு மாறிவிட்ட நிலையில் அந்த விசாரணைக் குழுவில் உள்ள 5 சி.பி.ஐ அதிகாரிகளுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியானது.
இந்த நிலையில் இவ்வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்த இரண்டு காவலர்களையும் மதுரை மத்திய சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன்பாக இந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!