Tamilnadu
சாத்தான்குளம் தந்தை - மகன் இரட்டைக் கொலை வழக்கில் கைதான காவலர்கள் இருவருக்கு கொரோனா தொற்று!
சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக் கொலை வழக்கு விசாரணை சி.பி.ஐ-க்கு மாறிவிட்ட நிலையில் அந்த விசாரணைக் குழுவில் உள்ள 5 சி.பி.ஐ அதிகாரிகளுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியானது.
இந்த நிலையில் இவ்வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்த இரண்டு காவலர்களையும் மதுரை மத்திய சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன்பாக இந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!