Tamilnadu
சாத்தான்குளம் தந்தை - மகன் இரட்டைக் கொலை வழக்கில் கைதான காவலர்கள் இருவருக்கு கொரோனா தொற்று!
சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக் கொலை வழக்கு விசாரணை சி.பி.ஐ-க்கு மாறிவிட்ட நிலையில் அந்த விசாரணைக் குழுவில் உள்ள 5 சி.பி.ஐ அதிகாரிகளுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியானது.
இந்த நிலையில் இவ்வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்த இரண்டு காவலர்களையும் மதுரை மத்திய சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன்பாக இந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
குதிரை பேரம் : முதலமைச்சர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்!
-
VB-G RAM G திட்டத்தை அமல்படுத்த த.வெ.க அரசு துடிப்பது ஏன்? : தி.மு.க ஐடி விங் கேள்வி!
-
குதிரை பேரம் ; அத்தனை அசிங்கத்துக்கும் வைகோ ஒப்புதல் வாக்குமூலம் : ஆதாரங்களுடன் உண்மை சொன்ன முரசொலி!
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!