Tamilnadu
சாத்தான்குளம் தந்தை - மகன் இரட்டைக் கொலை வழக்கில் கைதான காவலர்கள் இருவருக்கு கொரோனா தொற்று!
சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக் கொலை வழக்கு விசாரணை சி.பி.ஐ-க்கு மாறிவிட்ட நிலையில் அந்த விசாரணைக் குழுவில் உள்ள 5 சி.பி.ஐ அதிகாரிகளுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியானது.
இந்த நிலையில் இவ்வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்த இரண்டு காவலர்களையும் மதுரை மத்திய சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன்பாக இந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!