Tamilnadu
நோயாளிகளுக்குப் படுக்கை வசதி செய்து தர லஞ்சம் வாங்கிய அரசு மருத்துவமனை ஊழியர் - கொரோனா காலத்தில் அவலம்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் படுக்கை கிடைப்பதற்கும் சாப்பாட்டுக்கான டோக்கன் பெறுவதற்கும் மருத்துவமனைப் பணியாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தென்காசி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி செய்து தருவதற்கு லஞ்சம் பெறுவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இந்த மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் பெயர் பதிவு செய்யும் பணியில் இருப்பவர் கணேசன். இவர் படுக்கை வசதி வேண்டும் என்று கேட்கும் நோயாளிகளிடம் ரூ.50 லஞ்சமாகப் பெறுவதாகப் பல புகார்கள் வந்தும் நடவடிக்கையில்லாமல் இருந்துள்ளது.
இந்தநிலையில் மருத்துவமனையில் படுக்கை வசதி கேட்கும் ஒரு நோயாளியிடம் பெயர் பதிவு செய்யும் பணியிலிருந்த கணேசன் ரூ.50 லஞ்சமாக வாங்கி அதை அருகில் உள்ள மற்றொரு பணியாளரிடம் கொடுக்கும் காட்சி வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து நடவடிக்கை என்ற பெயரில் கணேசன் மட்டும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இவர் இதேமாதிரியான லஞ்ச புகாரில் ஏற்கனவே சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
குதிரை பேரம் : முதலமைச்சர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்!
-
VB-G RAM G திட்டத்தை அமல்படுத்த த.வெ.க அரசு துடிப்பது ஏன்? : தி.மு.க ஐடி விங் கேள்வி!
-
குதிரை பேரம் ; அத்தனை அசிங்கத்துக்கும் வைகோ ஒப்புதல் வாக்குமூலம் : ஆதாரங்களுடன் உண்மை சொன்ன முரசொலி!
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!