Tamilnadu
நோயாளிகளுக்குப் படுக்கை வசதி செய்து தர லஞ்சம் வாங்கிய அரசு மருத்துவமனை ஊழியர் - கொரோனா காலத்தில் அவலம்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் படுக்கை கிடைப்பதற்கும் சாப்பாட்டுக்கான டோக்கன் பெறுவதற்கும் மருத்துவமனைப் பணியாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தென்காசி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி செய்து தருவதற்கு லஞ்சம் பெறுவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இந்த மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் பெயர் பதிவு செய்யும் பணியில் இருப்பவர் கணேசன். இவர் படுக்கை வசதி வேண்டும் என்று கேட்கும் நோயாளிகளிடம் ரூ.50 லஞ்சமாகப் பெறுவதாகப் பல புகார்கள் வந்தும் நடவடிக்கையில்லாமல் இருந்துள்ளது.
இந்தநிலையில் மருத்துவமனையில் படுக்கை வசதி கேட்கும் ஒரு நோயாளியிடம் பெயர் பதிவு செய்யும் பணியிலிருந்த கணேசன் ரூ.50 லஞ்சமாக வாங்கி அதை அருகில் உள்ள மற்றொரு பணியாளரிடம் கொடுக்கும் காட்சி வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து நடவடிக்கை என்ற பெயரில் கணேசன் மட்டும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இவர் இதேமாதிரியான லஞ்ச புகாரில் ஏற்கனவே சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி? - “தூய்மையான அரசியலுக்கு உகந்துதானா?” - விசிக MP ரவிக்குமார் கேள்வி!
-
மீண்டும் மீண்டும் மக்களை அவதிக்குள்ளாக்கும் த.வெ.க : வரவேற்பு கொண்டாட்டத்தால் போக்குவரத்து நெரிசல்!
-
“இன்று மகளிரின் நம்பிக்கையாக திகழும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” : முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
-
ரூ.1000 வரவு வைத்தது தவெக அரசு : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்தே திட்டங்களே நிலைத்து நிற்கும்!
-
“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல”: மீண்டும் பிற்போக்குவாதிகளை கதறவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி