Tamilnadu
“அரசு மருத்துவமனையில் முறையான உணவு, தண்ணீர் வழங்குவதில்லை” : கொரோனா நோயாளிகள் புகார்!
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தரமற்ற உணவு குடிநீர் வழங்குவதாக கொரோனா நோயாளிகள் புகார் தெரிவித்து கொரோனா நோயாளிகள் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 4287 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் இதுவரை 2181 பேர் வீடு திரும்பினர். 2072 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளான தங்களுக்கு தரமற்ற குடிநீர் மற்றும் உணவு வழங்கப்படுவதாகவும், அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்றும் சுகாதாரமற்ற நிலையில் வார்டு உள்ளதாகவும் புகார் தெரிவித்து வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனுக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரியவித்துள்ளனார்.
Also Read
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு : தேர்ச்சி பெற்ற டாப் 3 மாவட்டங்கள் - பட்டியல் இதோ !
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - இந்த முறையும் மாணவிகளே சாதனை !
-
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !