Tamilnadu
“அரசு மருத்துவமனையில் முறையான உணவு, தண்ணீர் வழங்குவதில்லை” : கொரோனா நோயாளிகள் புகார்!
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தரமற்ற உணவு குடிநீர் வழங்குவதாக கொரோனா நோயாளிகள் புகார் தெரிவித்து கொரோனா நோயாளிகள் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 4287 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் இதுவரை 2181 பேர் வீடு திரும்பினர். 2072 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளான தங்களுக்கு தரமற்ற குடிநீர் மற்றும் உணவு வழங்கப்படுவதாகவும், அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்றும் சுகாதாரமற்ற நிலையில் வார்டு உள்ளதாகவும் புகார் தெரிவித்து வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனுக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரியவித்துள்ளனார்.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!