Tamilnadu
“வேலைக்கு வந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை” : அ.தி.மு.க முன்னாள் நகர செயலாளர் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதியைச் சேர்ந்தவர் அ.தி.மு.க முன்னாள் நகர செயலாளர் குமார். இவர் தக்கலை பேருந்து நிலையம் அருகில் எலக்ட்ரானிக் கடை ஒன்றை நடத்தி வருகிறது.
இவரின் கடைக்கு நேற்றைய தினம் 21 வயதான இளம் பெண் ஒருவர் பணிக்குச் சேர்ந்துள்ளார். இந்நிலையில் பணிக்குச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு குமார் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.
குமாரின் இத்தகைய நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டுள்ளார். அப்போது அமைதியாக இல்லாவிட்டால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக நேரிடும் என்று குமார் மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் தக்கலை காவல் நிலையத்தில் குமார் மீது புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் குமாரை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி எதற்காக பாதுகாத்து வருகிறார்? : ராகுல் காந்தி கேள்வி!
-
மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் : 8 பேர் கொண்ட குழுவை அமைத்து கொல்கத்தா போலீஸ் உத்தரவு !
-
ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கே.ஜி.எஃப் விக்கி கைது : போலிஸ் அதிரடி!
-
3 ஆண்டுகள் - 6115 புத்தொழில் நிறுவனங்கள் : திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனை!
-
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு : youtuber சவுக்கு சங்கர் கைது!