Tamilnadu
அரபிக்கடலில் வலுவடைகிறது புதிய புயல்.. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு தென் தமிழகம், உள் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது நாளை தாழ்வு மண்டலமாகவும் அதனை தொடர்ந்து நாளை மாறுநாள் விரைவாக புயலாகவும் வலுவடைந்து மேற்கு கடற்கரையை ஒட்டி, வடக்கு நோக்கி நகரும்.
அதன் காரணமாக, தென் கிழக்கு , தென் மேற்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் கேரள கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசும் என்பதால், ஜூன் 4ம் தேதி வரை மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 38 டிகிரி செல்ஸியசாகவும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்ஸியசாகவும் பதிவாகும் என குறிப்பிட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் சேலம் வீரகனூரில் 7 செ.மீ, கோவை வால்பாறை, வேலூர் அலங்காயம், திருப்பூர் திருமூர்த்தி மலை ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ மழையும், கிருஷ்ணகிரி சூளகிரியில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!
-
குஜராத், உத்தர பிரதேசத்தில் தேர்தல் விதிகளை மீறிய பாஜக : வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்!
-
"அரசியல் ஆதாயத்துக்காக வெறுப்புணர்வை ஊக்குவிக்கும் பா.ஜ.க" : சோனியா காந்தி MP குற்றச்சாட்டு!