Tamilnadu
அரபிக்கடலில் வலுவடைகிறது புதிய புயல்.. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு தென் தமிழகம், உள் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது நாளை தாழ்வு மண்டலமாகவும் அதனை தொடர்ந்து நாளை மாறுநாள் விரைவாக புயலாகவும் வலுவடைந்து மேற்கு கடற்கரையை ஒட்டி, வடக்கு நோக்கி நகரும்.
அதன் காரணமாக, தென் கிழக்கு , தென் மேற்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் கேரள கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசும் என்பதால், ஜூன் 4ம் தேதி வரை மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 38 டிகிரி செல்ஸியசாகவும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்ஸியசாகவும் பதிவாகும் என குறிப்பிட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் சேலம் வீரகனூரில் 7 செ.மீ, கோவை வால்பாறை, வேலூர் அலங்காயம், திருப்பூர் திருமூர்த்தி மலை ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ மழையும், கிருஷ்ணகிரி சூளகிரியில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’