Tamilnadu
தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: 11 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை எச்சரிக்கை!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும், அதிகபட்ச வெப்ப நிலையானது 40 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியஸில் ஒட்டி இருக்கும்.
தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, கரூர்,மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலையானது 40 ல் இருந்து 42 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை ஒட்டி இருக்கும். இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக நீலகிரி மாவட்டத்தில் ஏழு செ.மீ மழையும், அதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி மற்றும் சேலம் மாவட்டத்தில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
Also Read
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!