Tamilnadu
தமிழகத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா... புதுகையில் முதல் பாதிப்பு... குணமடைந்தோர் விபரம்! #Corona
தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,520 ஆக உள்ளது.
இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் இன்றளவில் 41,710 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றும், இன்றைக்கான 6,109ல் 43 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது. புதுக்கோட்டையில் முதல் முதலாக ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இரண்டு பேர் இன்று உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 457 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 46 பேர் குணமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் சோதனை செய்ததில் தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக அளவில் பரவவில்லை.
கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும்போது மக்கள் தடுத்து நிறுத்தக் கூடாது. அவ்வாறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்பும் பட்ஜெட் மேலாண்மையும் கட்டமைப்பிற்குள் உள்ளது” : இந்து நாளேடு பாராட்டு!
-
தஞ்சையில் அடுத்த மகளிர் அணி மாநாடு! - தயாராகும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” : முழு விவரம் உள்ளே!
-
“மதவாத அரசியல் போதையை தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்!” : திருச்சியில் முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!