Tamilnadu
சென்னையில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், சென்னையில் இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேனி விடுதியில் தங்கிருந்து தனியார் நாளிதழின் மருத்துவ பிரிவில் பணியாற்றிய பத்திரிக்கையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
தற்போது அவர் தங்கிருந்த விடுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சீல் வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. செய்தியாளருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், தனியார் தொலைக்காட்சியில் உதவி ஆசிரியராக பணிபுரியும் சென்னை ராயபுரத்தை சேர்ந்தவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரின் தந்தை சென்னை கடற்கரை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ளார்.
இவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பத்திரிக்கையாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!