Tamilnadu

“மக்களுக்கு உதவி செய்ய தடையா?” : அ.தி.முக அரசின் உத்தரவை எதிர்த்து தி.மு.க உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

இந்தியாவில் பரவிவரும் கொரோனா தமிழகத்திலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித முன் ஏற்பாடுகள் இன்றி அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் நாட்டு மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இப்படியிருகையில், ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்த உதவிகளும் தமிழகத்தில் பெரும்பாலன ஏழை மக்களுக்குச் சென்றடையவில்லை. மேலும் பாதுகாப்பு உபகரணமின்றி மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பல இடங்களில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சியான தி.மு.க மற்றும் தி.மு.க அமைப்புகள் சார்பில் தூய்மை தொழிலாளர்கள், வெளிமாநிலத்தவர்கள், ஏழை எளியோர், ஆதரவற்றவர்கள் ஆகியோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி என எவரும் ஊரடங்கு உத்தரவை மீறும் வகையில் தனியாக உதவி பொருள் வழங்க அனுமதி இல்லை எனவும், இதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அரசின் இந்த அறிவிப்பி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தி.மு.க மற்றும் அதன் கூட்டனி அரசியல் கட்சியினர் அரசின் அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் என வலியுறித்தி வருகின்றனர். மேலும் தடையை நீக்க கோரி தி.மு.க சார்பாக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

File image : MK Stalin

இந்நிலையில், மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மளிகை பொருட்களை வழங்க அரசியல் கட்சியினருக்கும், அமைப்புகளுக்கும் தடை விதித்த உத்தரவை எதிர்த்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்கு தொடர அனுமதி கோரி தி.மு.க சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் உயர்நீதிமன்ற பதிவுத்துறையில் முறையீடு செய்துள்ளார்.

Also Read: “அரசாங்கத்தை தி.மு.க செயல்பட வைக்கும்”: முதலமைச்சருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி