Tamilnadu
திருவிழாவில் செயின் பறிக்கும் சகோதரிகள்: திருடிய பணத்தை வைத்து லண்டனில் உல்லாச வாழ்க்கை- ‘திடுக்’ தகவல்!
கோவை கோணியம்மன் கோயில் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொள்வார்கள். கடந்த 4-ம் தேதி இந்த தேர்த்விழா நடைபெற்றது.
அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மொத்தம் 10 பெண்களின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் சி.சி.டி.வி., கேமிராவில் ஆய்வு செய்தபோது 3 பெண்கள் சிக்கினர்.
இந்துமதி, பராசக்தி, செல்வி என்ற அந்த மூன்று பெண்களுமே சகோதரிகள் ஆவர். சிறுவயதில் இருந்தே திருடி பழக்கப்பட்டுள்ளனர்.கோயில் திருவிழாக்களில் கூட்டநெரிசலில் பெண்கள் கழுத்தில் இருக்கும் தங்க செயின், தாலி செயின்களை பறிப்பதில் இவர்கள் கில்லாடிகள்.
பிரபலமான ஊர்களில் நடக்கும் திருவிழாக்களில் இவர்கள் கலந்துகொண்டு தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கி விடுவார்கள். கொள்ளையடித்து, கொள்ளையடித்தே சென்னை திருவான்மியூரில் சொந்தமாக ஒரு வீடு கட்டி இருக்கிறார்களாம்.
இவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.பராசக்தி இலங்கையிலும், செல்வி லண்டனிலும், இந்துமதி கேரளாவிலும் சொகுசு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
எந்த ஊரில் தேர் திருவிழா நடக்கும் என்று இந்துமதியின் கணவர் பாண்டியராஜனுக்கு தெரியுமாம். தகவல் தெரிந்ததும் 3 பேருக்கும் சொல்வார். அவர்களும் இதற்காக விமானம் ஏறி, டூரிஸ்ட் விசாவில் சென்னை வந்து தங்கி, பிறகு எங்கு கொள்ளை அடிக்கவேண்டுமோ அங்கு புறப்பட்டுச் செல்வார்களாம்.
திருவிழா நடக்கும் ஊரிலேயே ஒரு லாட்ஜில் ரூம் போட்டு தங்கி திருவிழாவுக்கு செல்வார்களாம். பெண்களிடம் நகையை கொள்ளையடித்துவிட்டு அறைக்கு வந்துவிடுவார்களாம். ஒரு திருவிழாவில் 100 சவரன் வரை கொள்ளையடிப்பார்களாம். கொள்ளையடித்த நகைகளை விற்று காசாக்கி அதன்பிறகு விமானத்தில் ஏறி அவரவர் வசிக்கும் நாடுகளுக்குச் சென்றுவிடுவார்களாம்.
இந்த மூவரையும் போலிஸார் கைது செய்துள்ளனர். கோவையில் நடந்த திருவிழாவில் திருடப்பட்ட 35 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மீதி 15 சவரன் நகை பாண்டியராஜனிடம் உள்ளது. தப்பி ஓடிய அவரை போலிஸார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!