Tamilnadu
“உரிமைக்காக போராடின பெண்கள நெஞ்சுல அடிச்சு இழுத்துட்டு போனாங்க”: போலிஸாரால் பாதிக்கப்பட்ட பெண்கள் குமுறல்
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போலிஸார் நடத்திய தடியடியை கண்டித்து, ஏராளமான இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தர்ணா போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலிஸார் தடியடி நடத்தியுள்ளனர். இதில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
மேலும் போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்களையும் போலிஸார் கொடூரமான முறையில் தாக்கியதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், “SOS செயலி பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்னு போலிஸ் சொன்னாங்க.
அதே போலிஸ் தான் உரிமைக்காக போராடின பெண்கள நெஞ்சுல அடிச்சு இழுத்துட்டு போனாங்க. எந்த போலிசும் எங்க பாதுகாப்புக்கு வரல. பெண்கள் மேல ஆண் போலிஸ் எப்படி கை வைக்கலாம். போலிசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” எனத் தெரிவித்தார்.
காவல்துறையினரின் தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய விடிய சாலை மறியல் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியை கண்டித்தும் சிஏஏ-வை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!