Tamilnadu
“உரிமைக்காக போராடின பெண்கள நெஞ்சுல அடிச்சு இழுத்துட்டு போனாங்க”: போலிஸாரால் பாதிக்கப்பட்ட பெண்கள் குமுறல்
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போலிஸார் நடத்திய தடியடியை கண்டித்து, ஏராளமான இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தர்ணா போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலிஸார் தடியடி நடத்தியுள்ளனர். இதில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
மேலும் போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்களையும் போலிஸார் கொடூரமான முறையில் தாக்கியதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், “SOS செயலி பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்னு போலிஸ் சொன்னாங்க.
அதே போலிஸ் தான் உரிமைக்காக போராடின பெண்கள நெஞ்சுல அடிச்சு இழுத்துட்டு போனாங்க. எந்த போலிசும் எங்க பாதுகாப்புக்கு வரல. பெண்கள் மேல ஆண் போலிஸ் எப்படி கை வைக்கலாம். போலிசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” எனத் தெரிவித்தார்.
காவல்துறையினரின் தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய விடிய சாலை மறியல் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியை கண்டித்தும் சிஏஏ-வை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!