Tamilnadu
சிறப்பு வகுப்பின்போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் : கடலூரில் அதிர்ச்சி சம்பவம்!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை அடுத்துள்ள அறந்தாங்கியில் புனித அந்தோணியார் தனியார் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மரிய விக்டோ என்பவர் விடுதிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்பின்போது பயிற்சிக்கு வரும் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுதொடர்பாக பள்ளி ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மரிய விக்டோ பள்ளியின் தாளாளர் என்பதால் ஆசிரியர்கள் கண்டுகொள்ளாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவிகள் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இதனையடுத்து முதலமைச்சரின் தனிப்பிரிவு, இதுகுறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்தியுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவில் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் சமூக நலப் பாதுகாப்பு தாசில்தார் ஆகியோர் பள்ளிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும், சோழவரம் போலிஸாரும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி தாளாளரே, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தால் அப்பகுதி பெற்றோர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். உரிய முறையில் விசாரணை செய்து, தாளாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Also Read
-
தருமபுரி - ரூ.39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!