Tamilnadu
#CAA-வுக்கு எதிராக சுவரோவியம் வரைந்த 2 பெண்கள் கைது - அடக்குமுறையைக் கையாளும் எடப்பாடி அரசு!
மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகின்றன. இந்தப் போராட்டத்திற்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியற்காக இதுவரை 10,000-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் மற்றும் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகம் ஒருபடி மேலே சென்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோகித்தாலும், கோலம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்தாலும் வழக்குத் தொடரப்பட்டு வரும்நிலையில், தற்போது சுவர் ஓவியம் வரைந்தவர்களையும் போலிஸார் கைது செய்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தினை திரும்பப் பெற வலியுறுத்தியும், கல்வி, வேலைவாய்ப்பு வேண்டும் எனக் கோரியும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் சார்பில் திருச்சியில் மாநாடு நடத்தவுள்ளனர்.
இந்த மாநாட்டை விளக்கி, காஞ்சிபுரம் மாவட்டம் பழைய ரயில் நிலையம் அருகே சுவர் விளம்பரம் செய்த மக்கள் அதிகாரத்தை சேர்ந்த இரு பெண்களை போலிஸார் இன்று கைது செய்துள்ளனர். போலிஸாரின் இத்தகைய நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
Also Read
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!