Tamilnadu
கேங்மேன் பணிக்கான நியமனத்தில் பலகோடி ரூபாய் ஊழல் : தமிழ்நாடு மின்துறையின் முறைகேடு அம்பலம்!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 5,000 கேங்மேன் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு நேரடி நியமனம் செய்யப்பட்டது.
இதில் மின் கம்பங்களில் ஏறுதல், மின் பொருட்களை தூக்கிக் கொண்டு ஓடுதல் போன்ற உடல் தகுதி தேர்வில், தோல்வி அடைந்த பலரை சில தொழிற்சங்கங்கள் பணம் பெற்றுக்கொண்டு பணி வழங்கியதாக கூறப்படுகிறது.
கேங்மேன் பதவிக்கு இவ்வாறு தேர்தெடுக்கப்பட்டவர்கள் 80% பேர் தகுதியில்லாதவர்களாக இருப்பதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனவே கேங்மேன் பணிக்காக ஆட்கள் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதால் தொடர்புடைய மின்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் மீது சி.பி.ஐ விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, அடுத்தகட்ட விசாரணையை வருகிற 31ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Also Read
-
திருமணத்துக்கு மறுப்பு : 3 நாட்கள் வன்கொடுமை செய்து சூடு போட்ட இளைஞர்-பாஜக ஆளும் உ.பி-யில் தொடரும் அவலம்!
-
“பிரஜ்வல் வீடியோவை நான்தான் பாஜக நிர்வாகியிடம் கொடுத்தேன்...” - அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்த ஓட்டுநர் !
-
எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்தின் எதிரொலி: இறுதியாக வாக்குப்பதிவு விபரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
-
இரக்கமற்ற பிரஜ்வால் ரேவண்ணா : ஓட்டம் பிடிக்க உதவிய பா.ஜ.க!
-
முறைகேடுக்கு வழிவகுக்கும் தேர்தல் ஆணையம்! :எச்சரிக்கும் முன்னாள் தேர்தல் ஆணையர் மற்றும் எதிர்க்கட்சிகள்!