Tamilnadu
விரைவில் பெரியார் வாழ்க என ரஜினி கூறுவார் - திருமாவளவன் எம்.பி பேட்டி!
துக்ளக் விழாவில் தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து இது தொடர்பாக பேசியுள்ளார் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன்.
அதில், “தந்தை பெரியாரை விமர்சிப்பது, கொச்சைப்படுத்துவது 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. மாமலையிடம் மோதி குப்புற விழுந்திருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் பெரியாரின் கொள்கைகளுக்கு தேர்தல் அரசியலில் மேன்மேலும் வலு சேர்த்தவர்கள்.
சங் பரிவாரின் கருத்துகளுக்கு ரஜினிகாந்த் அடிப்பணிந்து செயல்படுகிறார்.
ரஜினி பகடை காயாக மாறி வருகிறார் போலும். இல்லை அதுதான் அவரது அடையாளமாக இருந்தால் அது அவரது அரசியல் நிலைப்பாடாக இருந்தால் அந்த கனவு பலிக்காது.
பெரியார் இல்லாமல் தமிழகத்தில் அரசியலில் ஈடுபட முடியாது. இதனை ரஜினி விரைவில் உணர்வார். விரைவில் பெரியார் வாழ்க என ரஜினிகாந்த் தெரிவிப்பார்.
இறுதியாக, பொதுத்தேர்வுகளை பொறுத்தவரை 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு கொண்டு வருவது ஏற்புடையது அல்ல. தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு செய்து, தமிழில் வழிபாடு நடத்தவேண்டும்.” என திருமாவளவன் கூறினார்.
Also Read
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!
-
”சிஎஸ்கே-வில் மீண்டும் ரெய்னா, பிராவோ, முரளி விஜய்... களைகட்டப்போகும் சேப்பாக்கம்” - முழு விவரம்!
-
“பழனிசாமி ஒரு நன்றிகெட்ட அரசியல்வாதி” : ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு!
-
“சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வாஷ்அவுட் ஆகும்” - எல்.கே. சுதீஷ் எம்.பி பேட்டி!
-
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!