Tamilnadu
விரைவில் பெரியார் வாழ்க என ரஜினி கூறுவார் - திருமாவளவன் எம்.பி பேட்டி!
துக்ளக் விழாவில் தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து இது தொடர்பாக பேசியுள்ளார் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன்.
அதில், “தந்தை பெரியாரை விமர்சிப்பது, கொச்சைப்படுத்துவது 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. மாமலையிடம் மோதி குப்புற விழுந்திருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் பெரியாரின் கொள்கைகளுக்கு தேர்தல் அரசியலில் மேன்மேலும் வலு சேர்த்தவர்கள்.
சங் பரிவாரின் கருத்துகளுக்கு ரஜினிகாந்த் அடிப்பணிந்து செயல்படுகிறார்.
ரஜினி பகடை காயாக மாறி வருகிறார் போலும். இல்லை அதுதான் அவரது அடையாளமாக இருந்தால் அது அவரது அரசியல் நிலைப்பாடாக இருந்தால் அந்த கனவு பலிக்காது.
பெரியார் இல்லாமல் தமிழகத்தில் அரசியலில் ஈடுபட முடியாது. இதனை ரஜினி விரைவில் உணர்வார். விரைவில் பெரியார் வாழ்க என ரஜினிகாந்த் தெரிவிப்பார்.
இறுதியாக, பொதுத்தேர்வுகளை பொறுத்தவரை 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு கொண்டு வருவது ஏற்புடையது அல்ல. தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு செய்து, தமிழில் வழிபாடு நடத்தவேண்டும்.” என திருமாவளவன் கூறினார்.
Also Read
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!
-
தமிழ்த்தாயின் தலைமகன் : பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் : காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் MRK உத்தரவு!