Tamilnadu
“ஒன்றிய தலைவர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்” - தி.மு.க கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அ.தி.மு.க பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது. இதுதவிர, மறைமுகத் தேர்தலில் பதவிகளைக் கைப்பற்றவும் பல்வேறு கடத்தல், விலைக்கு வாங்குதல் போன்ற தரங்கெட்ட நடவடிக்கைகளிலும் அ.தி.மு.கவினர் இறங்கினர்.
அ.தி.மு.க-வின் அதிகார வெறியாலும், ஆதிக்க பலத்தாலும் பல இடங்களில் மறைமுகத் தேர்தல்கள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டன. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியத் தலைவர் தேர்தலில் தி.மு.க வென்றாலும், அ.தி.மு.க-வினரின் வன்முறையால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வத்திராயிருப்பு ஒன்றியத் தலைவர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கோரி இன்று காலை தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வத்திராயிருப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 13 ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க கூட்டணி 6 இடங்களையும், அ.தி.மு.க கூட்டணி 6 இடங்களையும், சுயேட்சை ஓரிடத்தையும் வென்றனர்.
கடந்த 11-ம் தேதி நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக் குழு தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் தி.மு.க 7 கவுன்சிலர்களின் ஆதரவைப் பெற்றது. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்த அ.தி.மு.க குண்டர்கள் அங்கிருந்த பொருட்களைச் சூறையாடியதால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகளை உடனே அறிவிக்கக்கோரி வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடல் பகுதியில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று வருவாய் துறை அதிகாரிகளிடம் மறைமுக தேர்தல் அறிவிப்பு குறித்த கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
Also Read
-
“Online, Offline இண்டிலும் தி.மு.க தான் Lion என்று காட்டுவோம்!” : IT Wing கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!