Tamilnadu
வீட்டுக்குள் புதைத்து வைத்திருந்த 112 சவரன் நகைகள் கொள்ளை : கன்னியாகுமரியில் கொள்ளையர்கள் துணிகரச் செயல்!
கன்னியாகுமரி மாவட்டம் செக்குவிளை பகுதியைச் சேர்ந்த ராஜய்யன் - ராஜம்மாள் தம்பதியரின் வீட்டில் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராஜய்யன் தனது மகள் ஜெபா மற்றும் மனைவிக்குச் சொந்தமான 112 பவுன் நகைகளை, திருடர்களுக்கு பயந்து, வீட்டில் உள்ள தனது அறையிலேயே குழி தோண்டி புதைத்து வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கோவிலுக்குச் சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்த்தபோது, அறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளை, மர்மநபர்கள் தோண்டி எடுத்து திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜய்யன், போலிஸில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸார் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை (ஏப்.16) கருப்புக்கொடிப் போராட்டம்!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!