Tamilnadu
இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் ரூபி : சாத்தியமானது கலைஞரின் தொலைநோக்குப் பார்வை !
மருத்துவப் பணியாளர்களாக தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதலமைச்சர் பழனிசாமி மருத்துவப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அதில், அன்பு ரூபி என்ற திருநங்கையும் செவிலியராக பணி நியமன ஆணையைப் பெற்றார். இந்தியச் சுகாதார வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் செவிலியராக அரசு பணியாற்றுவது இவரே ஆவார்.
பணி நியமன ஆணை பெற்ற பிறகு பேசிய அன்பு ரூபி, “இது தனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என கூறியுள்ளார். பாலின வேறுபாட்டால் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியேற்றும் சமூகத்தில் தன்னை தன் தாயார் கனிவுடன் வளர்த்தார் என்று பேசிய அன்பு ரூபி, தனக்கு இதுவரை எந்த பாலியல் தொந்தரவுகளும் நேர்ந்ததே இல்லை என கூறியுள்ளார்.
இருப்பினும், பொது வெளியில் மற்ற திருநங்கைகளுக்கு நிகழ்வது போல தானும் வார்த்தை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அதனால் பல மனவலிகளை எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு ஏற்பட்ட பாலின மாற்றங்களை குறித்து முழுவதும் தெரிந்துகொண்டு அதனை இந்த சமூகத்துக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்” என குறிப்பிட்டுள்ளார்.
அரவாணிகள் என்று அழைக்கப்பட்டவர்களை சமூகத்தில் இருந்து விலகி இருக்கக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு திருநங்கை என்கிற பெயர் கொடுத்து, கல்வி கற்க வழி ஏற்படுத்தினார் தலைவர் கலைஞர். அவரின் கனவின் வழி இன்று தனது கனவை நிஜமாக்கி இருக்கும் திருநங்கை ரூபிக்கு நாடு முழுவதில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Also Read
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!
-
ரூ.25.72 கோடி செலவில் ‘பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“Computer Expert பழனிசாமியின் கனவு பலிக்காது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!
-
#VBGRAMG - மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம் : எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!