Tamilnadu
இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் ரூபி : சாத்தியமானது கலைஞரின் தொலைநோக்குப் பார்வை !
மருத்துவப் பணியாளர்களாக தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதலமைச்சர் பழனிசாமி மருத்துவப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அதில், அன்பு ரூபி என்ற திருநங்கையும் செவிலியராக பணி நியமன ஆணையைப் பெற்றார். இந்தியச் சுகாதார வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் செவிலியராக அரசு பணியாற்றுவது இவரே ஆவார்.
பணி நியமன ஆணை பெற்ற பிறகு பேசிய அன்பு ரூபி, “இது தனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என கூறியுள்ளார். பாலின வேறுபாட்டால் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியேற்றும் சமூகத்தில் தன்னை தன் தாயார் கனிவுடன் வளர்த்தார் என்று பேசிய அன்பு ரூபி, தனக்கு இதுவரை எந்த பாலியல் தொந்தரவுகளும் நேர்ந்ததே இல்லை என கூறியுள்ளார்.
இருப்பினும், பொது வெளியில் மற்ற திருநங்கைகளுக்கு நிகழ்வது போல தானும் வார்த்தை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அதனால் பல மனவலிகளை எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு ஏற்பட்ட பாலின மாற்றங்களை குறித்து முழுவதும் தெரிந்துகொண்டு அதனை இந்த சமூகத்துக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்” என குறிப்பிட்டுள்ளார்.
அரவாணிகள் என்று அழைக்கப்பட்டவர்களை சமூகத்தில் இருந்து விலகி இருக்கக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு திருநங்கை என்கிற பெயர் கொடுத்து, கல்வி கற்க வழி ஏற்படுத்தினார் தலைவர் கலைஞர். அவரின் கனவின் வழி இன்று தனது கனவை நிஜமாக்கி இருக்கும் திருநங்கை ரூபிக்கு நாடு முழுவதில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Also Read
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!
-
குஜராத், உத்தர பிரதேசத்தில் தேர்தல் விதிகளை மீறிய பாஜக : வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்!
-
"அரசியல் ஆதாயத்துக்காக வெறுப்புணர்வை ஊக்குவிக்கும் பா.ஜ.க" : சோனியா காந்தி MP குற்றச்சாட்டு!
-
வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏன்? : தேர்தல் ஆணையத்திற்கு தொல்.திருமாவளவன் MP கேள்வி!
-
வாக்களிக்க விடாமல் இஸ்லாமியர்கள் மீது போலீசார் கொடூரத் தாக்குதல் - தலைவிரித்தாடும் பாஜகவின் அராஜகம்!