Tamilnadu
ஐஐடி மாணவி ஃபாத்திமா மொபைலில் இருந்த தற்கொலைக் குறிப்பு உண்மையா? - தடயவியல் ஆய்வறிக்கையில் தகவல்!
சென்னை ஐ.ஐ.டி-யில் முதுகலை படிப்பு பயின்று வந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் கடந்த மாதம் 8ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ஃபாத்திமா லத்தீப் பேராசிரியர்கள் துன்புறுத்தல் தான் தற்கொலைக்கு காரணம் எனக் கூறி சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டு தற்கொலைக் குறிப்பு ஒன்றை தனது செல்போனில் பதிவிட்டு இருந்தார்.
ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கினை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் விசாரித்து வந்த நிலையில், மாணவியின் செல்போன் லாக் செய்யப்பட்டு இருந்ததால் அதை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தி தடயங்களை சேகரிக்க வேண்டும் என கடந்த வாரம் மாணவியின் பெற்றோர்கள் முன்னிலையில் செல்போனை தடவியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் தடயவியல் துறை முதற்கட்ட ஆய்வறிக்கையை மத்திய குற்றப்பிரிவு போலிஸாருக்கு வழங்கியுள்ளது. அதில் செல்போனில் உள்ள தற்கொலை குறிப்பு பொய்யானது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப்பின் தற்கொலைக் குறிப்பு போலி எனப் பலரால் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அது போலியானது இல்லை என்று தடயவியல் துறை தெரிவித்திருப்பது முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதனையடுத்து, மாணவியின் தற்கொலை தொடர்பாக மூன்று பேராசிரியர்களிடம் மீண்டும் மத்திய குற்றப்பிரிவு போலிஸார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!