Tamilnadu
கடலூரில் கனமழை பாதிப்பு - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவி!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்யவேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. சுவர் இடிந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டையில் இன்று காலை பாதிக்கப்பட்ட மக்களை கொட்டும் மழையில் நேரில் சந்தித்த தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும், சுவர் இடிந்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை வழங்கினார்.
தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தி.மு.க., முன்னணி செயல்வீரர்கள் உடன் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.
Also Read
- 
	    
	      
“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
 - 
	    
	      
”பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” : Chennai Press Club கண்டனம்!
 - 
	    
	      
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக 2 பேர் நியமனம் : கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
 - 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!