Tamilnadu
இன்னும் 2 நாளுக்கு சென்னையில் செம்ம மழை இருக்கு.. வானிலை நிலவரம்!
தமிழகத்தின் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்ததாவது,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் அடுத்த 24 மணிநேரத்திற்கு தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றார்.
அதேச்சமயம் மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய டெல்டா மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மற்றும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்தார்.
லட்சத்தீவு பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால் குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய கடற்கரை பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!