Tamilnadu
''டிசம்பர் 1, 2ல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு'' - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ''தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அநேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளது.
ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, அரியலூர், திருச்சி கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது'' எனத் தெரிவித்தார்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் கீழணை ஆகிய பகுதிகளில் 12 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.
சூறைக் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல் ஆகிய பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் நாளை தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல் மற்றும் மாலத்தீவு ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Also Read
-
10,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? : பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!
-
”தொழிலாளர்களை காத்து வரும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ’மே தின’ வாழ்த்து!
-
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு PRO பிரதமர் மோடி : முரசொலி!
-
பாஜகவின் வண்டவாளத்தை அம்பலப்படுத்தும் Youtuber குறித்து அவதூறு பரப்பும் பாஜகவினர்... குவியும் கண்டனம் !
-
இங்கிலாந்து வாழ் இந்தியர்களாலும் வெறுக்கப்படும் மோடி!