Tamilnadu
சென்னையில் மீண்டும் "தலை" தூக்கும் பைக் ரேஸ் கலாச்சாரம் : உயிருக்கு போராடும் 2 பேர்!
சென்னையில் சில நாட்களாக நடைபெறாமல் இருந்த பைக் ரேஸ், தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது. சென்னை மெரீனா, அடையாறு பாலம், ஆர்.கே சாலை போன்ற இடங்களில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெரினா சாலையில் காதைக் கிழிக்கும் சப்தங்களுடன் இன்று அதிகாலை சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆர்.கே.சாலையை கடக்க முயன்ற இருவர் மீது பைக் வேகமாக மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பைக் இரண்டு துண்டுகளாக உடைந்து நொறுங்கியுள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ரஹ்மான் மற்றும் அவரது நண்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கு காரணமான இளைஞர்களிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களால், சாலையை கடந்து சென்ற இருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பைக் ரேஸ் நடைபெறாமல் தடுக்க காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!