Tamilnadu
சென்னையில் மீண்டும் "தலை" தூக்கும் பைக் ரேஸ் கலாச்சாரம் : உயிருக்கு போராடும் 2 பேர்!
சென்னையில் சில நாட்களாக நடைபெறாமல் இருந்த பைக் ரேஸ், தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது. சென்னை மெரீனா, அடையாறு பாலம், ஆர்.கே சாலை போன்ற இடங்களில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெரினா சாலையில் காதைக் கிழிக்கும் சப்தங்களுடன் இன்று அதிகாலை சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆர்.கே.சாலையை கடக்க முயன்ற இருவர் மீது பைக் வேகமாக மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பைக் இரண்டு துண்டுகளாக உடைந்து நொறுங்கியுள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ரஹ்மான் மற்றும் அவரது நண்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கு காரணமான இளைஞர்களிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களால், சாலையை கடந்து சென்ற இருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பைக் ரேஸ் நடைபெறாமல் தடுக்க காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Also Read
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!
-
ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
“கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!