Tamilnadu
‘காவல்நிலைய கட்டிடத்திற்குள் போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலை’ - புதுச்சேரியில் பரபரப்பு!
புதுச்சேரி நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் விபல்குமார். இவர் இன்று மதியம் ஒரு மணி அளவில் போலீஸ் நிலையத்திற்கு அருகே உள்ள கட்டிடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபல்கமாரின் சொந்த ஊர் தொண்டமாநத்தம். தற்போது அவர் வில்லியனூரில் வீடு கட்டி குடும்பத்துடன் இருந்து வருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் கம்பெனி ஒன்றில் நடந்த விபத்து குறித்து விபல்குமார் விசாரித்து வந்திருக்கிறார். இதுதொடர்பாக மேலதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக விபல்குமார் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது குடும்ப பிரச்னை காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தற்கொலை செய்துகொண்ட விபல்குமார், மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர். யாரிடமும் அதிர்ந்து பேசமாட்டார் என்று சக போலிஸ் நண்பர்கள் வருத்தத்தோடு தெரிவிக்கின்றனர். பட்டப்பகலில் காவல் நிலைய கட்டிடத்திற்குள் போலிஸ் சப்- இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்துகொண்டது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!