Tamilnadu
சிறுவனின் மூக்கில் சிக்கிய மீன் : சாதுர்யமாக வெளியே எடுத்த மருத்துவர் - புதுக்கோட்டை அருகே பரபரப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் அருள்குமார். 7ம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுவன் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளான்.
அப்போது சிறுவனின் மூக்கில் வலி எடுத்துள்ளது. மூக்கில் ஏதோ சிக்கியிருப்பது போல் உணர்ந்த அருள்குமாரின் பெற்றோர் உடனே அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு, சிறுவனை சோதனை செய்ததில், மூக்கில் திலேப்பியா (ஜிலேபி) வகை சிறிய மீன் ஒன்று சிக்கியுள்ளதைக் கண்டறிந்தனர். பின்னர் பணியாளர்களின் உதவியுடன் ஒரு மணிநேரமாகப் போராடி மருத்துவர் கதிர்வேல் மீனை வெளியே எடுத்துள்ளார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
-
“ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.. கட்டாயப் படுத்தப்பட்டாரா?” - முழு விவரம் அறிய!
-
“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. உடன்பிறப்புக்களே தயாராகுங்கள்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தவெக அமைச்சர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்... 15 நாட்கள் மட்டுமே கெடு... விவரம் உள்ளே!
-
போதை பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ : தவெக அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் திமுக மாணவர் அணி !