Tamilnadu
சிறுவனின் மூக்கில் சிக்கிய மீன் : சாதுர்யமாக வெளியே எடுத்த மருத்துவர் - புதுக்கோட்டை அருகே பரபரப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் அருள்குமார். 7ம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுவன் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளான்.
அப்போது சிறுவனின் மூக்கில் வலி எடுத்துள்ளது. மூக்கில் ஏதோ சிக்கியிருப்பது போல் உணர்ந்த அருள்குமாரின் பெற்றோர் உடனே அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு, சிறுவனை சோதனை செய்ததில், மூக்கில் திலேப்பியா (ஜிலேபி) வகை சிறிய மீன் ஒன்று சிக்கியுள்ளதைக் கண்டறிந்தனர். பின்னர் பணியாளர்களின் உதவியுடன் ஒரு மணிநேரமாகப் போராடி மருத்துவர் கதிர்வேல் மீனை வெளியே எடுத்துள்ளார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!