Tamilnadu
குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது TNPSC - சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் விரைவில் அறிவிப்பு!
6,491 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்.
கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்ற குரூப் - 4 தேர்வை 16,29,865 பேர் எழுதினர். இந்தத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தவறான கேள்விகள் இடம்பெற்றிருந்தது சர்ச்சைக்கு உள்ளானது. ஆனால், அதுகுறித்து தேர்வாணையம் விளக்கம் அளிக்கவில்லை.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு நடைபெற்ற 72 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறைவான நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது தமிழ்நாடு தேர்வாணைய வரலாற்றில் இதுவே முதன்முறை.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யும் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்; விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் மூலம் விவரங்கள் தெரிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !