Tamilnadu
குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது TNPSC - சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் விரைவில் அறிவிப்பு!
6,491 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்.
கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்ற குரூப் - 4 தேர்வை 16,29,865 பேர் எழுதினர். இந்தத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தவறான கேள்விகள் இடம்பெற்றிருந்தது சர்ச்சைக்கு உள்ளானது. ஆனால், அதுகுறித்து தேர்வாணையம் விளக்கம் அளிக்கவில்லை.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு நடைபெற்ற 72 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறைவான நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது தமிழ்நாடு தேர்வாணைய வரலாற்றில் இதுவே முதன்முறை.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யும் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்; விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் மூலம் விவரங்கள் தெரிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!