Tamilnadu
குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது TNPSC - சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் விரைவில் அறிவிப்பு!
6,491 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்.
கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்ற குரூப் - 4 தேர்வை 16,29,865 பேர் எழுதினர். இந்தத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தவறான கேள்விகள் இடம்பெற்றிருந்தது சர்ச்சைக்கு உள்ளானது. ஆனால், அதுகுறித்து தேர்வாணையம் விளக்கம் அளிக்கவில்லை.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு நடைபெற்ற 72 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறைவான நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது தமிழ்நாடு தேர்வாணைய வரலாற்றில் இதுவே முதன்முறை.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யும் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்; விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் மூலம் விவரங்கள் தெரிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!