Tamilnadu
குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது TNPSC - சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் விரைவில் அறிவிப்பு!
6,491 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்.
கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்ற குரூப் - 4 தேர்வை 16,29,865 பேர் எழுதினர். இந்தத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தவறான கேள்விகள் இடம்பெற்றிருந்தது சர்ச்சைக்கு உள்ளானது. ஆனால், அதுகுறித்து தேர்வாணையம் விளக்கம் அளிக்கவில்லை.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு நடைபெற்ற 72 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறைவான நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது தமிழ்நாடு தேர்வாணைய வரலாற்றில் இதுவே முதன்முறை.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யும் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்; விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் மூலம் விவரங்கள் தெரிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
Also Read
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!