Tamilnadu
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சரிதா வழக்கு : கோவை நீதிமன்றம் தீர்ப்பு விதிப்பு !
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சரிதா நாயர். இவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன். இவர்கள் இருவரும் இணைந்து கோவை வடவள்ளியில் ‘ஐ.சி.எம்.எஸ்' என்ற பெயரில் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிறுவனத்தின் பெயரில் காற்றலை அமைத்துத் தருவதாக கூறி சுமார் ரூ.26லட்சம் மோசடி செய்ததாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கண்ணன், மூவரும் குற்றவாளிகள் என அறிவித்தார். மேலும், நடிகை சரிதா நாயர் முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் மேனேஜர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!