Tamilnadu
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சரிதா வழக்கு : கோவை நீதிமன்றம் தீர்ப்பு விதிப்பு !
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சரிதா நாயர். இவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன். இவர்கள் இருவரும் இணைந்து கோவை வடவள்ளியில் ‘ஐ.சி.எம்.எஸ்' என்ற பெயரில் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிறுவனத்தின் பெயரில் காற்றலை அமைத்துத் தருவதாக கூறி சுமார் ரூ.26லட்சம் மோசடி செய்ததாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கண்ணன், மூவரும் குற்றவாளிகள் என அறிவித்தார். மேலும், நடிகை சரிதா நாயர் முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் மேனேஜர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Also Read
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!