Tamilnadu
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சரிதா வழக்கு : கோவை நீதிமன்றம் தீர்ப்பு விதிப்பு !
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சரிதா நாயர். இவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன். இவர்கள் இருவரும் இணைந்து கோவை வடவள்ளியில் ‘ஐ.சி.எம்.எஸ்' என்ற பெயரில் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிறுவனத்தின் பெயரில் காற்றலை அமைத்துத் தருவதாக கூறி சுமார் ரூ.26லட்சம் மோசடி செய்ததாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கண்ணன், மூவரும் குற்றவாளிகள் என அறிவித்தார். மேலும், நடிகை சரிதா நாயர் முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் மேனேஜர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Also Read
-
நிபந்தயற்ற ஆதரவு! : “உண்மையில் தியாகம்தான்.. வரலாறு பாராட்டும்...” - கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் பாராட்டு!
-
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துலாம் தேவை இல்ல... - நெத்திப்போட்டில் அடித்த ஒன்றிய பாஜக அரசு! - விவரம்!
-
மகளிர் இட ஒதுக்கீடு : “வரவேற்றாலும், எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம்!” - அதிரடி காட்டிய முதலமைச்சர்!
-
இனிதே நிறைவுற்ற பேச்சுவார்த்தை... திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? - விவரம்!
-
வேறு பெண்ணுடன் உறவு... தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... அதிமுக பிரமுகர் மீது புகார்!