Tamilnadu
#LIVE UPDATES | மிகக் கடுமையான சூறாவளி புயலாக மாறும் ‘மகா’ : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
கனமழைக்கு வாய்ப்பு இல்லை!
அரபிக்கடலில் உள்ள மகா புயல் விலகி செல்வதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை
- இந்திய வானிலை ஆய்வு மையம்
மிகக் கடுமையான சூறாவளி புயலாக மாறும் மகா புயல்
அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த மகா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மிகக் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது.
- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
மகா புயல் தீவிர புயலாக மாறியது!
அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த மகா புயல் தீவிர புயலாக மாறியது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என தகவல்.
அரபிக் கடல் பகுதிக்கு நவம்பர் 4-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டும் என என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை : நீலகிரியில் மண்சரிவு!
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிகப்பட்ட இடங்களில் மீட்பு துறையினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், ஈரோடு, தருமபுரி, சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் நவம்பர் 4-ம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
‘மகா’ புயல் : 25 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த 17ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ‘மகா’ புயலாக உருவானதன் காரணமாக தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?