Tamilnadu
பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி : மலர்தூவி மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் 57-வது குருபூஜை விழா பசும்பொன்னில் நடைபெறுகிறது. இதையொட்டி, பாதுகாப்பு பணிக்கு சுமார் 8,000 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவச் சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் தி.மு.க நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுரையில் இருந்து பசும்பொன் கிராமத்திற்கு செல்வதற்கு முன்னதாக மதுரை வண்டியூரில் உள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்குச் சென்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், “ தேசியம், தெய்வீகத்தை இருக்கண்ணாக கருதி வாழ்ந்து வந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். தேவர் குருபூஜை நாளில் அரசு விடுமுறை அளிப்பது குறித்து தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!