Tamilnadu
பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி : மலர்தூவி மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் 57-வது குருபூஜை விழா பசும்பொன்னில் நடைபெறுகிறது. இதையொட்டி, பாதுகாப்பு பணிக்கு சுமார் 8,000 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவச் சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் தி.மு.க நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுரையில் இருந்து பசும்பொன் கிராமத்திற்கு செல்வதற்கு முன்னதாக மதுரை வண்டியூரில் உள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்குச் சென்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், “ தேசியம், தெய்வீகத்தை இருக்கண்ணாக கருதி வாழ்ந்து வந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். தேவர் குருபூஜை நாளில் அரசு விடுமுறை அளிப்பது குறித்து தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!