Tamilnadu
எழுவர் விடுதலை தீர்மானம் என்ன ஆனது? : தமிழக அரசின் தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர்? - அதிர்ச்சி தகவல்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 7 பேரும் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 2018-ம் ஆண்டு செப்டம்பரில் 7 பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
முன்னதாக, இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 7 பேரையும் முன் விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.
ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!