Tamilnadu
‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சீமானை சேர்த்துடுங்க’ - புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஆவேசம்!
ராஜீவ்காந்தி இறப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு உருவாகி வருகிறது. இதுதொடர்பாக புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஆ. நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேசத்தை 21-ம் நூற்றாண்டுக்கு அழைத்து சென்ற இணையற்ற தலைவரும், வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவை ஏற்றம் பெறச்செய்த ஒப்பற்ற தலைவருமான ராஜீவ்காந்தியை கொன்று புதைத்தது எங்கள் கூட்டம்தான் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பொது மேடையில் பேசி இருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.
அரசியல் விளம்பரத்துக்காக வெற்று கூச்சலிடும் சீமான் எங்கள் தலைவரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? இந்திய நாட்டின் ஈடில்லா முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியை இன துரோகி என்று கூறும் சீமான் தமிழர்களின் உணர்வுகளை தூண்டி வியாபார அரசியல் செய்யும் உங்களுக்கு எங்கள் அன்பு தலைவரை பற்றி விமர்சிக்க துளிகூட தகுதி கிடையாது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும். அரசு தீவிர விசாரணை நடத்தி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சீமானையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்.
ஏற்றமிகு தலைவர் ராஜீவ் காந்தியை தரமற்ற முறையில் விமர்சித்த சீமானின் கருத்தை தமிழர்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்திய நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு நமச்சிவாயம் அறிக்கையில் கூறியுள்ளார்.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!