Tamilnadu
உங்ககிட்ட ‘5 பைசா’இருக்கா? - பிரியாணி சாப்பிடலாம் வாங்க!
உலக உணவு தினம் அக்டோபர் 16ந் தேதியன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு வித்தியாசமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பு வழங்குகிறது சென்னையில் உள்ள தொப்பி வாப்பா பிரியாணிக்கடை.
சென்னையில் மடிப்பாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் தொப்பி வாப்பா பிரியாணிக் கடைகளில் நாளை ஒருநாள் மட்டும், 5 பைசா நாணயத்தை தந்து ஒரு பிரியாணியை பெற்றுச் செல்லலாம் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட 4 கிளைகளிலும், 5 பைசா நாணயத்தை எடுத்துக் கொண்டு முதலில் வரும் 50 நபர்களுக்கு மட்டும் தொப்பி வாப்பா பிரியாணி வழங்கப்படும் எனவும், ஒரு நபருக்கு ஒரு பிரியாணி மட்டுமே வழங்கப்படும் என்றும் ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
உங்களிடம் 5 பைசா நாணயம் இருந்தால், நீங்கள் தொப்பி வாப்பா பிரியாணியை ருசித்து சுவைக்கலாம்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!