Tamilnadu
உங்ககிட்ட ‘5 பைசா’இருக்கா? - பிரியாணி சாப்பிடலாம் வாங்க!
உலக உணவு தினம் அக்டோபர் 16ந் தேதியன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு வித்தியாசமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பு வழங்குகிறது சென்னையில் உள்ள தொப்பி வாப்பா பிரியாணிக்கடை.
சென்னையில் மடிப்பாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் தொப்பி வாப்பா பிரியாணிக் கடைகளில் நாளை ஒருநாள் மட்டும், 5 பைசா நாணயத்தை தந்து ஒரு பிரியாணியை பெற்றுச் செல்லலாம் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட 4 கிளைகளிலும், 5 பைசா நாணயத்தை எடுத்துக் கொண்டு முதலில் வரும் 50 நபர்களுக்கு மட்டும் தொப்பி வாப்பா பிரியாணி வழங்கப்படும் எனவும், ஒரு நபருக்கு ஒரு பிரியாணி மட்டுமே வழங்கப்படும் என்றும் ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
உங்களிடம் 5 பைசா நாணயம் இருந்தால், நீங்கள் தொப்பி வாப்பா பிரியாணியை ருசித்து சுவைக்கலாம்.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!