Tamilnadu
உங்ககிட்ட ‘5 பைசா’இருக்கா? - பிரியாணி சாப்பிடலாம் வாங்க!
உலக உணவு தினம் அக்டோபர் 16ந் தேதியன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு வித்தியாசமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பு வழங்குகிறது சென்னையில் உள்ள தொப்பி வாப்பா பிரியாணிக்கடை.
சென்னையில் மடிப்பாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் தொப்பி வாப்பா பிரியாணிக் கடைகளில் நாளை ஒருநாள் மட்டும், 5 பைசா நாணயத்தை தந்து ஒரு பிரியாணியை பெற்றுச் செல்லலாம் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட 4 கிளைகளிலும், 5 பைசா நாணயத்தை எடுத்துக் கொண்டு முதலில் வரும் 50 நபர்களுக்கு மட்டும் தொப்பி வாப்பா பிரியாணி வழங்கப்படும் எனவும், ஒரு நபருக்கு ஒரு பிரியாணி மட்டுமே வழங்கப்படும் என்றும் ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
உங்களிடம் 5 பைசா நாணயம் இருந்தால், நீங்கள் தொப்பி வாப்பா பிரியாணியை ருசித்து சுவைக்கலாம்.
Also Read
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!