Tamilnadu
கீழடி அகழாய்வு குழிகளை மூட வேண்டாம் : பொதுமக்கள் கோரிக்கை!
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடியில் தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதுவரை 5 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதில் தமிழர் நாகரிகத்தை வெளிப்படுத்தும் விதமாக 700க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்தததை அடுத்து தோண்டப்பட்ட குழிகளை மூட தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, இன்று மாலை முதல் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் மூடப்படுகின்றன. இதற்கிடையில், அடுத்தகட்ட அகழாய்வு பணி நடைபெறும் வரை குழிகளை மூடாமல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!