Tamilnadu
கீழடி அகழாய்வு குழிகளை மூட வேண்டாம் : பொதுமக்கள் கோரிக்கை!
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடியில் தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதுவரை 5 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதில் தமிழர் நாகரிகத்தை வெளிப்படுத்தும் விதமாக 700க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்தததை அடுத்து தோண்டப்பட்ட குழிகளை மூட தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, இன்று மாலை முதல் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் மூடப்படுகின்றன. இதற்கிடையில், அடுத்தகட்ட அகழாய்வு பணி நடைபெறும் வரை குழிகளை மூடாமல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !