Tamilnadu
கீழடி அகழாய்வு குழிகளை மூட வேண்டாம் : பொதுமக்கள் கோரிக்கை!
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடியில் தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதுவரை 5 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதில் தமிழர் நாகரிகத்தை வெளிப்படுத்தும் விதமாக 700க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்தததை அடுத்து தோண்டப்பட்ட குழிகளை மூட தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, இன்று மாலை முதல் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் மூடப்படுகின்றன. இதற்கிடையில், அடுத்தகட்ட அகழாய்வு பணி நடைபெறும் வரை குழிகளை மூடாமல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Also Read
-
31.50 இலட்சம் தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள்.. வழங்கினார் அமைச்சர் சி.வி.கணேசன்!
-
கோவையில் திமுக மேற்கு மண்டல இளைஞரணி சந்திப்பு கூட்டம்... எங்கு? எப்போது? - முழு விவரம்!
-
“சமூக நலத்திட்டங்களை, சமூக உரிமைகளாக கருதும் திராவிட மாடல் அரசு!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0 : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!- விவரம் உள்ளே!
-
அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்த "தமிழ்நாடு கடல்சார் வாரியக் கூட்டம்": முக்கிய முடிவுகள்! - முழு விவரம்!