Tamilnadu
கீழடி அகழாய்வு குழிகளை மூட வேண்டாம் : பொதுமக்கள் கோரிக்கை!
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடியில் தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதுவரை 5 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதில் தமிழர் நாகரிகத்தை வெளிப்படுத்தும் விதமாக 700க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்தததை அடுத்து தோண்டப்பட்ட குழிகளை மூட தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, இன்று மாலை முதல் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் மூடப்படுகின்றன. இதற்கிடையில், அடுத்தகட்ட அகழாய்வு பணி நடைபெறும் வரை குழிகளை மூடாமல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!