Tamilnadu
சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்ட திபெத்திய பேராசிரியர் கைது!
அக்டோபர் 11 முதல் 13ம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இருநாடு உறவு குறித்து பிரதமர் மோடியும், சீன அதிபரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அதனையடுத்து, மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களையும் சுற்றிப்பார்க்க உள்ளனர். இதற்காக அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை முழுவதும் காவல் துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது. இந்நிலையில், சென்னைக்கு வரவிருக்கும் ஜி ஜின்பிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னையில் சந்தேகத்திற்கிடமாக 21 திபெத்தியர்கள் அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சேலையூர் காவல்துறையினர் 8 திபெத்திய மாணவர்களை கைது செய்த நிலையில், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் டென்சின் நூர்பு என்பவரை நீலாங்கரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
டென்சிங் நூர்பு கடந்த சில ஆண்டுகளாகவே திபெத் தொடர்பான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போராட்டம் தொடர்பாக வேறு யாரேனும் திட்டமிட்டு இருக்கிறார்களா என்ற கோணத்தில் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !