Tamilnadu
அதிகாரிகள் துணையின்றி நீட் தேர்வு முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
தமிழக மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 207 மேனேஜ்மெண்ட் கோட்டா இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்பக்கோரி கோவையை சேர்ந்த தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வெளிநாட்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடு, அகில இந்திய மற்றும் மாநில அரசின் இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை மதிப்பெண்களுடன் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி கிருபாகரன், வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எத்தனை மாணவர்கள் ஆள்மாறாட்டதில் ஈடுப்பட்டுள்ளனர், எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த ஆள்மாறாட்டத்தில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி ஊழியர்களின் யார் யார் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதிகாரிகள் துணையில்லாமல் ஆள்மாறாட்டம் நடந்து இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக சிபிசிஐடி அக்டோபர் 15ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Also Read
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“பா.ஜ.க-வின் ஊதுகுழல் அன்புமணி” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்!
-
“சனாதனத்தின் வேர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறுத்தெறிவார்” : திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!