Tamilnadu
ரூ.80-ஐ எட்டும் பெட்ரோல், டீசல் விலை; கலக்கத்தில் வாகன ஓட்டிகள்!
சர்வதேச கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் இன்றும் சென்னையில் 22வது நாளாக பெட்ரோல் டீசலின் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.77.50 ஆகவும், டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து ரூ.71.30 ஆகவும் விற்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் ஏழை எளிய மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
முன்னதாக, மோடி அரசு கடந்த 2014ம் ஆண்டு முதல் கச்சா எண்ணெயை குறைந்த விலைக்கு வாங்கிவிட்டு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை அநியாயத்துக்கு உயர்த்தி விற்பனை செய்து வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அண்மையில் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே உள்ள பொருளாதார நெருக்கடியில், இப்படி நாளுக்கு நாள் மக்கள் மீது வரி, விலை உயர்வு என அனைத்து சுமைகளையும் மோடி அரசு ஏற்றிவிட்டு கார்ப்பரேட்டுகளுக்கான வரியில் மட்டும் சலுகைக் காட்டி வருவதை நாட்டு மக்களுக்கு இழைக்கும் பச்சை துரோகமாக கருதப்படுகிறது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்! : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு!
-
வாபஸ் பெற்ற வழக்கு தான் சர்க்காரியா கமிஷன் வரலாறு; இதனை விஜய் அறியமாட்டார்! - முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“லண்டன் போய் முதலீடு ஈர்த்த லட்சணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு..” - விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ்.பாரதி!
-
ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும் அரசியல் : த.வெ.க அரசுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
3 நாள் விடுமுறை - கூடுதல் பேருந்துகளை விட வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத சேடிஸ்ட் த.வெ.க அரசு!