Tamilnadu
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இன்று முதல் வேட்புமனுத்தாக்கல் தொடக்கம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் தொகுதிகளுக்கு அக்.21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடக்கவுள்ள தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று முதல் தொடங்கி செப்.,30ம் தேதி வரை நடைபெறும். அக்.,1ம் தேதி வேட்புமனுக்களின் மீதான பரிசீலனையும், அக்.,3ம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும்.
ஆகையால், தேர்தல் களம் இன்று முதல் சூடுபிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் நேற்று சென்னை அண்ணா அறிவாலத்தில் தொடங்கின.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தலைமை கழகத்தில் சமர்பிக்க வேண்டும் என பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நாளை நேர்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!