Tamilnadu
தத்தளிக்கும் நிறுவனங்களில் முதலீடு - மத்திய அரசின் தவறை ஈடுகட்ட எல்.ஐ.சி-யை சூறையாடும் பா.ஜ.க!
இந்திய மக்களின் வாழ்நாள் பாதுகாப்புக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் உத்தரவாதம் அளிக்கும் எல்.ஐ.சி நிறுவனத்திடம் இருந்து பல லட்சம் கோடி ரூபாய்களை முதலீடு என்ற பெயரில் மோடி அரசு வங்கியுள்ளது.
நீண்ட காலமாகவே நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான முதலீட்டை எல்.ஐ.சியிடம் இருந்து நிறுவனம்தான் வழங்கி வருகிறது. கடந்த 2013-14ம் நிதியாண்டு வரை, சுமார் 11 லட்சத்து 90 ஆயிரம்கோடி ரூபாயை நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு செய்துள்ளது.
தற்போது மோடி அரசு பாலிசி தாரர்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் திவாலன நிறுவனங்கள் மீது முதலீடு செய்ய எல்.ஐ.சி-யை நிர்ப்பந்திக்கிறது.
அதேபோல பல பொதுத்துறை நிறுவனங்களில், எல்.ஐ.சி நிறுவனத்தை 10 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ய வைத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அதன் தொடர்சியாக எல்.ஐ.சி-யிடமிருந்து கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 57 ஆயிரம் கோடி ரூபாயை பொதுத்துறை நிறுவனங்கள் மீது முதலீடு செய்ய வைத்துள்ளது மத்திய அரசு.
இதனால் வாராக் கடன்களால் நஷ்ட்டத்தை சந்தித்து வரும் வங்கிகளில், முதலீடு செய்வதால் எல்.ஐ.சி நிறுவனத்துக்கு தான் நஷ்டம் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை. இது பாலிசி தாரர்களின் பணம் என்பதைக் கூட உணராமல், தவறான பொருளாதார கொள்கையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இதை செய்துள்ளது மோடி அரசு.
அதுமட்டுமின்றி, கடந்த 1956-ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை எல்.ஐ.சி முதலீடு செய்த தொகை ரூ.11 லட்சத்து 90 ஆயிரம் என்றால், கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியில் மட்டும் ரூ. 10 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை எல்.ஐ.சி-யிடமிருந்து முதலீடு என்ற பெயரில் பெறப்பட்டுள்ளது.
இதன் மூலம் மோடி அரசு எல்.ஐ.சி-யை தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான கருவியாக பயன்படுத்திக் கொள்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Also Read
-
"ஹர்திக் பாண்டியாவுக்கு முழு ஆதரவு என ரோஹித் கூறாதது ஏன் ?" - ஆரோன் பின்ச் கேள்வி !
-
"இந்தியாவைக் காக்க வருக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்" : முரசொலி தலையங்கம்!
-
”டெல்டா மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்”: செல்வராசுMP மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
-
உருகிய வெனிசுலாவின் கடைசி பனிப்பாறை : பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை !
-
"இந்தியா முழுக்க சாதிய ஏற்றத்தாழ்வு உள்ளது" - இயக்குனர் வெற்றிமாறன் !