Tamilnadu
“5 மற்றும் 8ம் வகுப்பு தேர்வில் தற்போதையே முறையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இந்த முடிவுக்கு பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பலத்த எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 11, 12ம் வகுப்புகளுக்கான பாடங்களை 6ல் இருந்து 5 ஆக குறைப்பதற்கான கோரிக்கை விண்ணப்பங்கள் முதலமைச்சர் வசம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தவேண்டும் எனும் திட்டம் மத்திய அரசினுடையது. அடுத்த 3 ஆண்டுகள் வரை 5 மற்றும் 8ம் வகுப்பு தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார். மாணாக்கர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்காக 3 ஆண்டுகள் விலக்கு பெற்றுள்ளதாகவும், தேர்வில் ஃபெயில் மட்டும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
Also Read
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!
-
”அடுத்தடுத்த அரிவாள் வெட்டு.. அச்சத்தில் மக்கள்.. தறிகெட்டுப் போன சட்டம் ஒழுங்கு” : முழு விவரம்!
-
நடிகர் அஜித்குமார் தாயார் காலமானார் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
”சறுக்கலை சந்தித்த முதல்வர் விஜயின் டெல்லி பயணம்.. செய்தியாளர்களா.. பதறிய விஜய்” : முரசொலி தலையங்கம்!
-
ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! வீரவசனம் வேண்டாம் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி