Tamilnadu
“5 மற்றும் 8ம் வகுப்பு தேர்வில் தற்போதையே முறையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இந்த முடிவுக்கு பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பலத்த எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 11, 12ம் வகுப்புகளுக்கான பாடங்களை 6ல் இருந்து 5 ஆக குறைப்பதற்கான கோரிக்கை விண்ணப்பங்கள் முதலமைச்சர் வசம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தவேண்டும் எனும் திட்டம் மத்திய அரசினுடையது. அடுத்த 3 ஆண்டுகள் வரை 5 மற்றும் 8ம் வகுப்பு தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார். மாணாக்கர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்காக 3 ஆண்டுகள் விலக்கு பெற்றுள்ளதாகவும், தேர்வில் ஃபெயில் மட்டும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!