Tamilnadu
“5 மற்றும் 8ம் வகுப்பு தேர்வில் தற்போதையே முறையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இந்த முடிவுக்கு பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பலத்த எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 11, 12ம் வகுப்புகளுக்கான பாடங்களை 6ல் இருந்து 5 ஆக குறைப்பதற்கான கோரிக்கை விண்ணப்பங்கள் முதலமைச்சர் வசம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தவேண்டும் எனும் திட்டம் மத்திய அரசினுடையது. அடுத்த 3 ஆண்டுகள் வரை 5 மற்றும் 8ம் வகுப்பு தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார். மாணாக்கர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்காக 3 ஆண்டுகள் விலக்கு பெற்றுள்ளதாகவும், தேர்வில் ஃபெயில் மட்டும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!