Tamilnadu
“5 மற்றும் 8ம் வகுப்பு தேர்வில் தற்போதையே முறையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இந்த முடிவுக்கு பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பலத்த எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 11, 12ம் வகுப்புகளுக்கான பாடங்களை 6ல் இருந்து 5 ஆக குறைப்பதற்கான கோரிக்கை விண்ணப்பங்கள் முதலமைச்சர் வசம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தவேண்டும் எனும் திட்டம் மத்திய அரசினுடையது. அடுத்த 3 ஆண்டுகள் வரை 5 மற்றும் 8ம் வகுப்பு தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார். மாணாக்கர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்காக 3 ஆண்டுகள் விலக்கு பெற்றுள்ளதாகவும், தேர்வில் ஃபெயில் மட்டும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
Also Read
-
ரூ.20.89 கோடியில் 4 முடிவுற்ற பணிகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!