Tamilnadu
“விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் 1885ம் ஆண்டு சட்டத்தைக் கைவிடுக” : விவசாயிகள் போராட்டம்!
விவசாயிகளின் நில உரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் 1885ம் ஆண்டு தந்தி சட்டத்தைக் கைவிடக்கோரி இந்திய தந்தி சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தில் 10 மாவட்டங்களின் விவசாய நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் செல்வதை கண்டித்தும், 1885ம் ஆண்டு இந்திய தந்தி சட்டத்தைக் கைவிடக் கோரியும் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாய சங்கத்தினர் அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
“விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் 1885ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தந்தி கம்பங்கள் அமைக்கும் சட்டத்தைக் கைவிட்டு விவசாயிகளின் நில உரிமையைப் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும்.
ஏற்கனவே செயல்படும் திட்டங்களுக்கு மின் கோபுரத்திற்கும் கம்பி செல்லும் பாதைக்கும் மாத வாடகையும் உரிய இழப்பீடும் வழங்கவேண்டும். புதிதாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் கேபிள் மூலமாக செயல்படுத்தப்பட வேண்டும்.
விவசாயிகளின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், அரசாணை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 50 விவசாயிகளை போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!