Tamilnadu
“விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் 1885ம் ஆண்டு சட்டத்தைக் கைவிடுக” : விவசாயிகள் போராட்டம்!
விவசாயிகளின் நில உரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் 1885ம் ஆண்டு தந்தி சட்டத்தைக் கைவிடக்கோரி இந்திய தந்தி சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தில் 10 மாவட்டங்களின் விவசாய நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் செல்வதை கண்டித்தும், 1885ம் ஆண்டு இந்திய தந்தி சட்டத்தைக் கைவிடக் கோரியும் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாய சங்கத்தினர் அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
“விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் 1885ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தந்தி கம்பங்கள் அமைக்கும் சட்டத்தைக் கைவிட்டு விவசாயிகளின் நில உரிமையைப் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும்.
ஏற்கனவே செயல்படும் திட்டங்களுக்கு மின் கோபுரத்திற்கும் கம்பி செல்லும் பாதைக்கும் மாத வாடகையும் உரிய இழப்பீடும் வழங்கவேண்டும். புதிதாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் கேபிள் மூலமாக செயல்படுத்தப்பட வேண்டும்.
விவசாயிகளின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், அரசாணை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 50 விவசாயிகளை போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!
-
தமிழ்த்தாயின் தலைமகன் : பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் : காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் MRK உத்தரவு!