Tamilnadu
“எவன் வந்தாலும் வெட்டி வீழ்த்துவோம்” கொலைமிரட்டல் விடுத்த பா.ஜ.க நிர்வாகி மீது வழக்குப் பதிவு!
டெல்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தி திவாஸ் நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழி அவசியம் என்று கூறியிருந்தார். மேலும் அந்தக்கருத்தை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தார்.
அவரின் கருத்துக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நட்டாலம் சிவின்குமார் என்பவர், இந்தி மொழியை ஆதரித்தும், இந்தி திணிப்பை எதிர்த்து வரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ஒருபதிவை முகநூலில் பகிர்ந்துள்ளார்.
அதில், “இந்தி மொழியை ஆதரித்து இந்திக்கு எதிராக வீதியில் எவன் வந்தாலும் அவனை வெட்டி வீழ்த்துவோம். இந்தி எங்கள் உயிரடா!”என்றும் பதிவிட்டிருந்தார். அவரின் பதிவுகள் வன்முறையைத் தூண்டும் விதத்தில் இருப்பதாகவும் வெளிப்படை கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நட்டாலம் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் தி.மு.க இளைஞரணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப்புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் நட்டாலம் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!