Tamilnadu
பால் விலை உயர்வைத் தொடர்ந்து அதிகரிக்கும் ஆவின் பால் பொருட்களின் விலை : 18ம் தேதி முதல் அமல்!
தமிழகத்தில் பசும்பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தியும், எருமைப் பால் கொள்முதல் விலையில் 6 ரூபாய் உயர்த்தியும் தமிழக அரசு அறிவித்தது.
கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட காரணத்தால் ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலையும் அதிகரிக்கப்பட்டது. விலை உயர்வு கடந்த மாதம் 19ம் தேதி தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், ஆவின் பால் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் பவுடர் கிலோவுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.320 ஆகவும், பால்கோவா கிலோ ரூ.20 உயர்த்தப்பட்டு ரூ.520 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.460 லிருந்து ரூ.495 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தின் பன்னீர் ஒரு கிலோ ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.450 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெண்ணெய் அரை கிலோ ரூ 230-ல் இருந்து ரூ.240 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்களின் விலை உயர்வு புதன்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரூ.50,000 உதவித் தொகை : ஆராய்ச்சியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் கோவி. செழியன்!
-
ரூ.97 கோடி- 56000 சதுர அடி: சென்னையில் மக்கள் வசதிக்காக புதிய கட்டடத்தை திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரணதண்டனை... வங்கதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !
-
"4 ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்"- முதலமைச்சர் பெருமிதம்!
-
187 பயணிகளுடன் சென்னை வந்த விமானத்தில் திடீர் கோளாறு... விமானியின் சாதுரியத்தால் அவசரமாக தரையிறக்கம் !