Tamilnadu
பால் விலை உயர்வைத் தொடர்ந்து அதிகரிக்கும் ஆவின் பால் பொருட்களின் விலை : 18ம் தேதி முதல் அமல்!
தமிழகத்தில் பசும்பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தியும், எருமைப் பால் கொள்முதல் விலையில் 6 ரூபாய் உயர்த்தியும் தமிழக அரசு அறிவித்தது.
கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட காரணத்தால் ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலையும் அதிகரிக்கப்பட்டது. விலை உயர்வு கடந்த மாதம் 19ம் தேதி தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், ஆவின் பால் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் பவுடர் கிலோவுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.320 ஆகவும், பால்கோவா கிலோ ரூ.20 உயர்த்தப்பட்டு ரூ.520 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.460 லிருந்து ரூ.495 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தின் பன்னீர் ஒரு கிலோ ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.450 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெண்ணெய் அரை கிலோ ரூ 230-ல் இருந்து ரூ.240 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்களின் விலை உயர்வு புதன்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!