Tamilnadu
மாநில உரிமைகளை பறிப்பதையே குறியாக கொண்டிருக்கிறது பாஜக அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
“ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயல்” என தூத்துக்குடி தி.மு.க எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்தியில் இரண்டாவது முறையாக பா.ஜ.க பதவியேற்றதில் இருந்து, நாட்டையே தனதாக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக, காஷ்மீர் விவகாரம், முத்தலாக் என பல்வேறு சட்டங்களில் மாற்றம் கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி, "பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டையே ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது.” என தெரிவித்தார்.
“இதன் ஒரு பகுதியாகதான், மாநிலங்களுக்கு இருக்கக் கூடிய உரிமைகளை பறிக்கும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள். மத்திய பாஜக அரசின் இந்த செயல்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகமும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.” என்று கனிமொழி கூறினார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!