Tamilnadu
மாநில உரிமைகளை பறிப்பதையே குறியாக கொண்டிருக்கிறது பாஜக அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
“ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயல்” என தூத்துக்குடி தி.மு.க எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்தியில் இரண்டாவது முறையாக பா.ஜ.க பதவியேற்றதில் இருந்து, நாட்டையே தனதாக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக, காஷ்மீர் விவகாரம், முத்தலாக் என பல்வேறு சட்டங்களில் மாற்றம் கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி, "பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டையே ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது.” என தெரிவித்தார்.
“இதன் ஒரு பகுதியாகதான், மாநிலங்களுக்கு இருக்கக் கூடிய உரிமைகளை பறிக்கும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள். மத்திய பாஜக அரசின் இந்த செயல்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகமும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.” என்று கனிமொழி கூறினார்.
Also Read
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!
-
“முத்தமிழறிஞர் கலைஞருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” - தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!