Tamilnadu
மாநில உரிமைகளை பறிப்பதையே குறியாக கொண்டிருக்கிறது பாஜக அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
“ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயல்” என தூத்துக்குடி தி.மு.க எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்தியில் இரண்டாவது முறையாக பா.ஜ.க பதவியேற்றதில் இருந்து, நாட்டையே தனதாக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக, காஷ்மீர் விவகாரம், முத்தலாக் என பல்வேறு சட்டங்களில் மாற்றம் கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி, "பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டையே ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது.” என தெரிவித்தார்.
“இதன் ஒரு பகுதியாகதான், மாநிலங்களுக்கு இருக்கக் கூடிய உரிமைகளை பறிக்கும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள். மத்திய பாஜக அரசின் இந்த செயல்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகமும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.” என்று கனிமொழி கூறினார்.
Also Read
-
இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !
-
பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி எதற்காக பாதுகாத்து வருகிறார்? : ராகுல் காந்தி கேள்வி!
-
மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் : 8 பேர் கொண்ட குழுவை அமைத்து கொல்கத்தா போலீஸ் உத்தரவு !
-
ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கே.ஜி.எஃப் விக்கி கைது : போலிஸ் அதிரடி!
-
3 ஆண்டுகள் - 6115 புத்தொழில் நிறுவனங்கள் : திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனை!