Tamilnadu
மாநில உரிமைகளை பறிப்பதையே குறியாக கொண்டிருக்கிறது பாஜக அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
“ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயல்” என தூத்துக்குடி தி.மு.க எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்தியில் இரண்டாவது முறையாக பா.ஜ.க பதவியேற்றதில் இருந்து, நாட்டையே தனதாக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக, காஷ்மீர் விவகாரம், முத்தலாக் என பல்வேறு சட்டங்களில் மாற்றம் கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி, "பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டையே ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது.” என தெரிவித்தார்.
“இதன் ஒரு பகுதியாகதான், மாநிலங்களுக்கு இருக்கக் கூடிய உரிமைகளை பறிக்கும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள். மத்திய பாஜக அரசின் இந்த செயல்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகமும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.” என்று கனிமொழி கூறினார்.
Also Read
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!
-
தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பாஜகவின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
#Delimitation : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
‘ரெஸ்ட்’ இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கு தரும் ‘ரெஸ்பெக்ட்’ உரிமைத்தொகை : சேலத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
”தொகுதி மறுவரையறை மசோதா.. வடக்கில் வென்று ஆட்சியை பிடிக்கலாம் என்ற நினைப்பு” : முரசொலி விமர்சனம்!