Tamilnadu
“ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகம் நிச்சயமாக இணையும்’’ - அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி!
நாடு முழுவதும் உள்ள எந்த நியாயவிலைக் கடையிலும் சென்று தங்களுக்குத் தேவையான பொருட்களை மக்கள் வாங்கிக் கொள்ளும் வகையிலான, ’ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் பல அம்சங்கள், மாநில உரிமைகளைப் பறிக்கும் விதமாக இருப்பதாக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்நிலையில் நேற்று டெல்லியில், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் கூட்டம் நடந்தது. அதில் அனைத்து மாநில உணவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அந்த கூட்டத்தில் பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழக பொது விநியோகத் திட்டத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல், பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தரும் தொழிலாளர்கள் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் பெற்றுக்கொள்ளும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்துக் கூறிய அவர், ''ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகம் நிச்சயமாக இணையும். இதற்கான ஆலோசனைக் கூடத்தில் கலந்து கொள்ளத்தான் தமிழக உணவுத்துறை அமைச்சர் டெல்லி சென்றிருந்தார். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகம் இணைவதால் தமிழக மக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது.” என்றார்.
இந்நிலையில், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது குறித்து தனக்குத் தெரியாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் பொது விநியோக திட்டத்தில் பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”
-
ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!
-
”இந்திய இளைஞர்கள் உருவாக்கிய ’காக்ரோச் ஜனதா கட்சி’ - CJP.. அதிரவைக்கும் காரணங்கள்” - முழு விவரம் அறிக!
-
மீண்டும் ‘வந்தே மாதரம்’ முதலில்... தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளிய தவெக அரசு : குவியும் கண்டனம்!