Tamilnadu
மெட்ரோ தூண்களில் நோட்டீஸ் ஒட்டினால் 6 மாதம் சிறை : கண்டிப்பு காட்டும் மெட்ரோ ரயில் நிர்வாகம்
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக தி.மு.க ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞரால் தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவை பூமிக்கு அடியிலும், பாலங்கள் அமைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில் அமைப்பதற்காக நிறைய பாலங்களும் கட்டடங்களும் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், எவ்வித சுவரொட்டிகளும் ஒட்டக்கூடாது என ஏற்கெனவே மெட்ரோ நிர்வாகம் கூறியிருந்தது.
இதனை மீறி பலர் மெட்ரோ ரயில் தூண்களில், கட்டடங்களில் விளம்பரங்களுக்காகச் சுவரொட்டிகளை ஒட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆகையால் இதற்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் புதிதாக அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது, இனி மெட்ரோ ரயில் தூண்கள், பாலங்கள், கட்டடங்களில் நோட்டீஸ் ஒட்டினால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!