Tamilnadu
மெட்ரோ தூண்களில் நோட்டீஸ் ஒட்டினால் 6 மாதம் சிறை : கண்டிப்பு காட்டும் மெட்ரோ ரயில் நிர்வாகம்
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக தி.மு.க ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞரால் தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவை பூமிக்கு அடியிலும், பாலங்கள் அமைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில் அமைப்பதற்காக நிறைய பாலங்களும் கட்டடங்களும் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், எவ்வித சுவரொட்டிகளும் ஒட்டக்கூடாது என ஏற்கெனவே மெட்ரோ நிர்வாகம் கூறியிருந்தது.
இதனை மீறி பலர் மெட்ரோ ரயில் தூண்களில், கட்டடங்களில் விளம்பரங்களுக்காகச் சுவரொட்டிகளை ஒட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆகையால் இதற்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் புதிதாக அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது, இனி மெட்ரோ ரயில் தூண்கள், பாலங்கள், கட்டடங்களில் நோட்டீஸ் ஒட்டினால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Also Read
-
ராணுவ அதிகாரி மீதான விமர்சனம்... பாஜக அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம் !
-
பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!