Tamilnadu
மெட்ரோ தூண்களில் நோட்டீஸ் ஒட்டினால் 6 மாதம் சிறை : கண்டிப்பு காட்டும் மெட்ரோ ரயில் நிர்வாகம்
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக தி.மு.க ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞரால் தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவை பூமிக்கு அடியிலும், பாலங்கள் அமைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில் அமைப்பதற்காக நிறைய பாலங்களும் கட்டடங்களும் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், எவ்வித சுவரொட்டிகளும் ஒட்டக்கூடாது என ஏற்கெனவே மெட்ரோ நிர்வாகம் கூறியிருந்தது.
இதனை மீறி பலர் மெட்ரோ ரயில் தூண்களில், கட்டடங்களில் விளம்பரங்களுக்காகச் சுவரொட்டிகளை ஒட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆகையால் இதற்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் புதிதாக அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது, இனி மெட்ரோ ரயில் தூண்கள், பாலங்கள், கட்டடங்களில் நோட்டீஸ் ஒட்டினால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Also Read
-
ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!
-
பயோ மைனிங் முறை... சென்னை மாநகராட்சியில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்!
-
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு: ரூ.22,794 கோடி முதலீடு..127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. விவரம்
-
Budget2026 : “தேர்தல் நாடகத்தில் கூட தமிழ்நாடு என்றால் பாஜக புறக்கணிக்கிறது..” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
‘ஜூம்லாவும், ஒப்பனையும்’ நிறைந்த பட்ஜெட்! திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் விமர்சனம்!